HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 29 March 2012

புற்றுநோயைத் தடுக்கும் ஆஸ்பிரின்': புதிய ஆய்வு

தினந்தோறும் சிறிதளவு ஆஸ்பிரினை உட்கொள்வதன்மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்பதுடன் பெரும்பாலும் குணப்படுத்தவும் கூட முடியும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
மருத்துவ சஞ்சிகையான த லான்சட் இல் வெளியாகியுள்ள ஆய்வுகள், அஸ்பிரின் மருந்தின் புற்றுநோய்க்கு எதிரான இயல்புகள் குறித்த புதிய நம்பிக்கையை அளித்துள்ளன.
தொடர்புடைய விடயங்கள்


மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்காக பலர் தினந்தோறும் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது.
ஆனால், இந்த மருந்து புற்றுநோயையும் அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளையும் தடுக்கக்கூடியது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லையெனவும், அதனால் வயிற்றில் இரத்தப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் அதிகரிக்கலாம் என்றும் ஏற்கனவே நிபுணர்கள் எச்சரித்தனர்.
3-5 ஆண்டுகளில் முன்னேற்றம்
ஆனால் தற்போதைய புதிய ஆய்வை நடத்திய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ரொத்வேல், அஸ்பிரினால் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று முன்னரே தெரிவித்திருந்தார்.- 10 ஆண்டுகள் போன்ற நீண்டகாலப்போக்கிலேயே ஆஸ்பிரின் மருந்தினால் நல்ல பலன்களைக் காணமுடியும் என்றும் அப்போது கூறப்பட்டது.
ஆனால் தற்போது 77 ஆயிரம் பேருக்கும் அதிகமான நோயாளிகளிடத்தில் நடத்தப்பட்ட 51 பரீட்சார்த்த ஆய்வுகளின்போது ஆஸ்பிரின் மருந்தினால் 3 இலிருந்து 5 ஆண்டுகள் வரையான காலப்பகுதிக்குள் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று பேராசியர் பீட்டர் ரொத்வேல் தலைமையிலான விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல்வேறுபட்ட புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களை ஆஸ்பிரின் குறைப்பது மட்டுமன்றி, புற்றுநோய்கள் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதையும் அதனால் தடுக்கமுடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைப்பேர், உயிரிழந்தவர்கள் எத்தனைப்பேர் என்பதற்கும் அவர்களின் ஆஸ்பிரின் உபயோகத்துக்கும் இடையே தொடர்பு இருக்கின்றமையே இந்த ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
75 முதல் 300 மைக்ரோ கிராம் வரை தினந்தோறும் அஸ்பிரின் உட்கொண்டவர்களிடத்தில் நடத்திய ஆய்வில் புற்றுநோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கால்வாசிப் பங்களவு குறைந்திருந்தது.
புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் 5 ஆண்டு காலப்போக்கில் 15 வீதத்தால் குறைந்திருப்பதாகவும் அவ்வாறே ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் அவர்கள் ஆஸ்பிரினை தொடர்ந்தும் எடுத்துக்கொண்டால் உயிரிழப்புகளின் வீதத்தை மேலும் 37 வீதத்தால் குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் வயிற்றுக்குள் இரத்தக் கசிவுகள் ஏற்பட இந்த நீண்டநாள் ஆஸ்பிரின் பாவனை காரணமாவதாக சுட்டிக்காட்டப்படுகின்றமையையும் இங்கு கவனத்தில் கொண்டாகவேண்டும்.
எது எவ்வாறு இருப்பினும் ஆரோக்கியமான மனிதர்கள் புகைத்தலைக் கைவிடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற வழிமுறைகள் மூலம் புற்றுநோய் ஆபத்துக்களை இலகுவில் தடுத்துவிட முடியும் என்பதுதான் பேராசிரியர் ரொத்வேல் போன்றோர் அழுத்தமாகக் கூறுகின்ற விடயம். -DINAVIDIYAL!