HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 September 2013

காவிரியில் புதிய அணை கட்ட கருணாநிதி எதிர்ப்பு

சென்னை: கர்நாடக அரசு, காவிரியில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையி
ல், கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் நீர் மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதனை அனுமதிக்கக்கூடாது எனவும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக காவிரியில் 3 அணைகளை கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அது எதிர்க்கப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் அணைகள் கட்டுவதற்கு கர்நாடகம் ஆலோசித்தால் மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தி.மு.க., ஆட்சியிலேயே மேகதாது திட்டத்தை எதிர்த்துள்ளேன். இப்போதும் அதே நிலையில் தான் உள்ளேன் என கூறியுள்ளார்.



-DINAVIDIYAL!