HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 26 March 2012

பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான உதவித்தொகை

பொறியியல் படிப்பில் 2009ல் முதலாம் ஆண்டு படிப்பையும், 2010ல் இரண்டாம் ஆண்டு படிப்பையும் எந்த ஒரு பாடப்பிரிவிலும் தோல்வி இன்றி தேர்ச்சி பெற்று தற்போது 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் 35 பேர் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.1,500 வீதம் இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது. வேறு எந்த விதமான கல்வி உதவித் தொகையும் பெறாத மாணவர்களாகவும் இருக்க வேண்டும். இறுதி ஆண்டு வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
இது குறித்த மேலும் தகவல்களை www.ntpc.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.-DINAVIDIYAL!