இலங்கை வந்துள்ள இந்தியக் குழுவாலோ அல்லது இந்திய தேசத்தில் இருக்கின்றகருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரினாலேயோ இலங்கை அரசை அசைக்கமுடியாது.
நம்மை அசைப்பதற்கு அவர்களுக்குத் தகுதிஇல்லை. நாம் கொண்ட கொள்கையில்உறுதியுடன் நிற்கின்றோம். இவ்வாறுதெரிவித்துள்ளார் மேர்வின் சில்வா.இலங்கைவந்துள்ள இந்தியக் குழு தொடர்பாகக்கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சிங்களமக்களின் விருப்பத்தின்படிதான் தீர்வைக் கொடுக்கும் அரசு. ஏனெனில், இந்தநாட்டில் சிங்கள மக்களே பெரும்பான்மை இனத்தவர்.
அவர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே சிறுபான்மை இனத்தவர்களான தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.இந்தியாவுக்கு அடிபணிந்து நாம் செயற்படமாட்டோம். கருணாநிதி ஐயாவும்,ஜெயலலிதா அம்மையாரும் பாடும் பாடல்களுக்கு நாம் ஆடமாட்டோம். எம்மைஇந்திய தேசத்தால் அசைக்க முடியாது. இலங்கை வந்துள்ள இந்தியக் குழுஇங்குள்ள மக்களை பார்வையிட்டு போகலாம். ஆனால், தீர்வை உடன்வழங்குமாறு எம்மை நிர்ப்பந்திக்க முடியாது” என்று கூறினார் அமைச்சர் மேர்வின்சில்வா.-DINAVIDIYAL!