HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

சீன ஆலையில் நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் ஒப்புதல்

ஐபோன் மற்றும் ஐ-பேடுகளை தயாரிக்கும் சீனாவில் உள்ள தனது முக்கியமான விநியோக நிலையம் ஒன்றில் பணி நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு அமெரிக்க தொழிலாளர் உரிமைகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
சீனாவின் ஃபொக்ஸ்கொன் என்னும் இடத்தில் உள்ள இந்த ஆலையில் தொழிலாளர்கள் பெரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆபத்துக்களை எதிர்கொள்வதாகவும், அவர்கள் அங்கு அளவுக்கு அதிகமான மணித்தியாலங்கள் பணியாற்ற வைக்கப்படுவதாகவும், அமெரிக்காவின் ஃபெயார் லேபர் நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.
கிழக்கு சீனாவில் உள்ள இந்த ஃபொக்ஸ்கொன் ஆலையில் நடந்த ஒரு வெடி விபத்தில் இருவர் பலியான சம்பவத்தை அடுத்து இந்தப் புலனாய்வு நடத்தப்பட்டது. அங்கு பலர் தற்கொலையும் செய்திருக்கிறார்கள்.
இந்த புலனாய்வு அறிக்கை வெளியானதை அடுத்து ஆப்பிள் நிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரி அந்த ஆலைக்கு விஜயம் செய்திருந்தார்.     -DINAVIDIYAL!