HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 28 March 2012

கோச்சடையான்: லண்டன் ஸ்டுடியோவில் ரஜினி - சரத் - ஆதி!

-DINAVIDIYAL!

கோச்சடையான் - தி லெஜன்ட் வரலாற்றுப் பட ஷூட்டிங் லண்டனில் தொடங்கியது.

இந்தப் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்றார். அவருடன் நடிகர்கள் சரத்குமார், ஆதி உள்ளிட்டோம் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. ரஜினி - தீபிகா காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.

லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த ஸ்டுடியோவில்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எடுக்கப்படுகின்றன.

சில தினங்களுக்கு முன் ரஜினி, சௌந்தர்யா, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் லண்டன் சென்று சேர்ந்தனர். சமீபத்தில் சரத்குமார், அவர் மனைவி ராதிகா மற்றும் மகன் ராகுலுடன் லண்டனுக்குப் போய் ரஜினியுடன் சேர்ந்து கொண்டார்.

அடுத்து நடிகர் ஆதியும் லண்டன் போயுள்ளார். கதாநாயகி தீபிகா படுகோனும் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்..

ரஜினி, சரத், ஆதி தொடர்பான காட்சிகள் படமாகின்றன. இந்தப் படப்பிடிப்பின்போது, ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சரத்குமாரும் ராதிகாவும்.

இதுகுறித்து ராதிகா கூறுகையில், "கோச்சடையான் படப்பிடிப்பு இடைவெளையில் ரஜினியுடன் பேசிக் கொண்டிருந்தது இனிய அனுபவம். அப்போது நாங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். கேரவன் இல்லாமல், வெட்ட வெளியில் சாப்பிட்டுவிட்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த பழைய நினைவுகளை ரஜினி சார் சொல்லி மகிழ்ந்தார். அன்றைக்கு நடிகர்களுக்குள் அத்தனை அழகான, எளிய உறவு இருந்தது," என்றார்.